இங்கு என்ன எழுதுவதென்றே எனக்குத் தெரியவில்லை.எனினும் அழகி மென்பொருளை வடிவமைத்தவர்களுக்கு என் நன்றி , ஏனெனில் ஒரு Blogல் எப்படித் தமிழில் எழுதுவது எனத் தெரியாமல் நான் திண்டாடிக்கொண்டிருந்தபோது அழகி யூனிகோட் எடிட்டர் தான் எனக்குக் கைகொடுத்தது .இப்பொழுது கூட எனக்கு முரசு அஞ்சல் மென்பொருளைக்கொண்டு ஒரு Blogல் தமிழில் எழுதுவது எப்படி எனத் தெரியாது. நான் பல Blogகளைப் பார்த்து அவர்கள் எப்படித் தமிழில் input செய்திருப்பார்கள் என வியந்து போயிருக்கிறேன் .உண்மையிலேயே அழகி ரொம்ப அழகானவள் தான் .
இது புரட்டாசி மாதம்,ஸ்ரீனிவாஸனுக்கு மிக உகந்த மாதம் .திருப்பூரில் சுபத்ரா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் ஒரு அழகிய ஸ்ரீனிவாஸப்பெருமாள் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு வரும் பக்தர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் திருமண் அணிவிக்கப்படுகிறது.இது நல்ல விஷயம் தானே .சபாஷ்
Sri Vaishnava News இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »


